புதன், செப்டம்பர் 22, 2010

வேண்டும் வகுப்புவாரி ஒதுக்கீடு - இட ஒதுக்கீட்டுக்குச் சவால் விடும் பார்பனீயத்திற்கு அதுதான் மாற்றாக அமையும்.

ஆரியம் இன்னும் தங்கள் இன உணர்வை மறைக்காமல் தங்கள் ஜாதியினைத் தாங்கிப் பிடிக்க எத்தனிப்பதனை 22.09.2010 டெக்கான் க்ரானிகிள் நாள்தழில் வெளிவந்த செய்தியின் மூலம் வெளிப்படையாக நாம் அறிய இயலும். 
  1. இது வரையில் இவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தகுதி , திறமை என்ற வாதத்தில் தங்கள் இனத்தை வளர்த்தனர்.
  2. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினை மறைமுகமாக நடை பெறாமல் செய்ய ஆட்சேர்க்கையையே தடை செய்து ஆணை பிறப்பிக்க வழி செய்தனர்.
  3. இன்று அதனை அதாவது நடை பெறவே இல்லாத இட ஒதுக்கீட்டினை பத்தாண்டுகள் ஆகி விட்டதனால் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று எகத்தாளம் செய்கின்றனர்.
  4. ஜாதி வாரி இட ஒதுக்கீட்டை முழு மூச்சுடன் எதிர்த்துக் கூக்குரலிட்டனர்.
  5. சிறு பான்மைச் சமூகத்திற்கான அனைத்து நலத் திட்டங்களையும் எதிர்த்து மாய்மாலம் செய்தனர்.
  6. ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தங்கள் இன அதிகாரிகள் தடுத்ததுடன், இன்றும் அதனை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் நடத்தினால் பத்து வருடங்களுக்கொரு முறை அதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதால் அதனை தனியாக நடத்த அதாவது ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு படந்தாலும் அதனால் யார் சமூக வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதனை அறிய முடியாதவாறு செய்துள்ளனர்.

இதனையெல்லாம் செய்து விட்டு இன்று வெட்கமற்று ,

ஜாதி வாரியான கணக்கீடு வேண்டும் என்கின்றனர் , ஏதடா பரவாயில்லையென்று எண்ணிப்பார்த்தால் தங்களின் எண்ணிக்கை குறைவாயிருப்பதால் தங்களை "சிறு பான்மைச் சமுதாயமாக அறிவிக்க வேண்டுமாம், அதாவது தங்கள் இனத்தில் 30 % பேர் வறுமையில் வாடுகின்றார்களாம்!!." 

எப்படியிருக்கின்றது பாருங்கள் ஆரியத்தின் அடாவடி, அதாவது திராவிடர்கள் பெரும்பான்மையினமாம் அதற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் ஓர் நாள் வாதாடுவார்கள். ' இன்று வரை திராவிடர்களை ' நாமெல்லோரும் இந்துக்கள்' என்று மூளைச் சலவை செய்தவர்கள் இன்று தங்கள் இனத்திற்கு மத வழியாக அன்றி 'சிறுபான்மை இனம்' எனும் வாதத்தினை வைத்து இட ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை விடுகின்றனர். இன்று 'தகுதி, திறமை' இவையெல்லாம் தேவையில்லை. 

இவர்களின் பின்னால் இந்துக்கள் என்று சென்ற நமதருமைச் திராவிடச் சகோதரர்கள் இது பற்றி எந்தவித விழிப்புணர்வுமின்றி இன்றும் அவர்களை நம்பலாம். இதுதான் காலக் கொடுமை. வெட்டுபவனை ஆடு நம்புவதுதான் இயல்பு.

திராவிட இனமானது 70 % வறுமையில் வாடுகின்றது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் பெரும்பான்மை இனமானது வாழ்விழந்தால் கூடப் பரவாயில்லையாம், இவர்களில் சிரமப்படும் 30 % பேர் நன்கு வாழ வேண்டும்.

பெரும்பான்மை இனங்களின் ஆழ்ந்த உறக்கம் இவர்களுக்குக் கொண்டாட்டம், மாவிலும் கொள்ளை, பணியாரத்திலும் கொள்ளை. இறைவன் பெயரால் எல்லோருக்கும் மொட்டையடிக்கும் ஆரியத்தை திராவிடம் வீழ்த்த வேண்டுமானால் முதலில் பக்தி ஒழிய வேண்டும்.

இவர்கள் உண்மையிலேயே இட ஒதுக்கீட்டை விரும்பினால் அய்யா அவர்கள் சொன்ன வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டை ஒத்துக் கொள்ளட்டும். அதுதான் உண்மையான தீர்வாகயிருக்க முடியும்.

புதன், செப்டம்பர் 01, 2010

இலக்கியம்பட்டியும் இந்திய அரசியலும்

எரிக்கப்பட்ட மாணவிகளும் எரியாத நியாயங்களும் - தூக்குத் தண்டனை தவறுதான் என்றாலும் இந்த வழக்கிற்கு இது தேவையானதுதான்...

சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத நமது நெஞ்சமெல்லாம் பதற வைக்கும் பேருந்து எரிப்பு வழக்கு. தலையில் கை வைத்துக் கொண்டு 'கையறு நிலையில்' செய்வதறியாது திகைக்கும் மாணவர்கள். மாணவ, மாணவிகளை உள்ளே பத்திரமாய் இருக்கச் செய்து விட்டு அந்தக் காட்டு மிராண்டிக் கும்பலிடம் மன்றாடிய பேராசியைகள். இரண்டாவதாய் வந்த பல்கலைக் கழகப் பேருந்திலிருந்து வந்து உள்ளே சிக்கியவர்களுக்காய் கண்ணாடியை உடைக்கப் போராடும் மாணவர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கருகிய மலராத மொட்டுகளாய் அந்த மாணவிகள். இதயமுள்ளோர் நெஞ்சிலெல்லாம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்த கேள்விகள். நாகரீகமுள்ள சமுதாயம் நாணித் தலைகுனிய வேண்டிய வெட்கக் கேடான செயலுக்கு மேலும் மேலும் மேல் முறையீடுகள். தனியொரு மனிதனாய் தன் மகளின் இறப்புக்கு நீதி கோரி சர்வ வல்லமை பொருந்திய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறிய கோகிலவாணியின் அன்புத் தந்தை வீராச்சாமியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.


ஆம், இறுதியாக உச்ச நீதிமன்றம், சேலம் குற்றவியல் நீதிமன்ற அன்றைய நீதிபதி திரு கிருஷ்ணராஜா அவர்கள் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பாவமும் அறியாத, கவலையென்பதறியாத வாழ்வின் வாயிலில் நின்ற சின்னஞ் சிறு குழந்தைகளை குரூரமாக எரித்தவர்களுக்கு இந்தத் தண்டனை தேவைதான். ஆட்சியாளர்களின் மனதில் இடம்பிடித்து தங்கள் அரசியல் நுழைவு அல்லது உயர்வுக்கென ஆரம்பித்த சிலர் குமபல் மனோபாவத்தில் தாங்களாக வரித்துக் கொண்ட ஆணவம்தான், தங்களை யாராலும் ஒன்றும் செய்து விட இயலாது எனும் எண்ணம்தான் இந்த மூன்று மலர்களின் மரணத்தின் காரணம். ' அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கான ஆற்றல் சில சமயங்கலிள் அதிகம்தான்.
 
 
ஆட்சி மாறியதும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விசாரணையின் தடம் மாறிய பொழுதில் விபரீதத்தை உணர்ந்த கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி விசாரணை வேறு இடத்தில் நடந்திட வழி செய்ததுடன் உயர் நீதிமன்றத்தாலேயே விசாரணை அதிகாரியை நியமிக்க வழிவகை செய்ததால்தான் விசாரணையானது ஒழுங்காக நடந்திட இயன்றது. கண்ணீர் மல்க அன்று சாட்சியம் சொன்ன பேராசிரியைகள் மற்றும் சாட்சியங்கள், சக மாணவ்ர்கள் தங்கள் வாழ் நாளெல்லாம் மறக்க இயலாத அந்த்க் கோரச் சம்பவம் விதைத்த வடு ஆற இன்னும் பல காலம் பிடிக்கலாம்