புதன், செப்டம்பர் 22, 2010

வேண்டும் வகுப்புவாரி ஒதுக்கீடு - இட ஒதுக்கீட்டுக்குச் சவால் விடும் பார்பனீயத்திற்கு அதுதான் மாற்றாக அமையும்.

ஆரியம் இன்னும் தங்கள் இன உணர்வை மறைக்காமல் தங்கள் ஜாதியினைத் தாங்கிப் பிடிக்க எத்தனிப்பதனை 22.09.2010 டெக்கான் க்ரானிகிள் நாள்தழில் வெளிவந்த செய்தியின் மூலம் வெளிப்படையாக நாம் அறிய இயலும். 
  1. இது வரையில் இவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தகுதி , திறமை என்ற வாதத்தில் தங்கள் இனத்தை வளர்த்தனர்.
  2. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினை மறைமுகமாக நடை பெறாமல் செய்ய ஆட்சேர்க்கையையே தடை செய்து ஆணை பிறப்பிக்க வழி செய்தனர்.
  3. இன்று அதனை அதாவது நடை பெறவே இல்லாத இட ஒதுக்கீட்டினை பத்தாண்டுகள் ஆகி விட்டதனால் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று எகத்தாளம் செய்கின்றனர்.
  4. ஜாதி வாரி இட ஒதுக்கீட்டை முழு மூச்சுடன் எதிர்த்துக் கூக்குரலிட்டனர்.
  5. சிறு பான்மைச் சமூகத்திற்கான அனைத்து நலத் திட்டங்களையும் எதிர்த்து மாய்மாலம் செய்தனர்.
  6. ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தங்கள் இன அதிகாரிகள் தடுத்ததுடன், இன்றும் அதனை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் நடத்தினால் பத்து வருடங்களுக்கொரு முறை அதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதால் அதனை தனியாக நடத்த அதாவது ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு படந்தாலும் அதனால் யார் சமூக வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதனை அறிய முடியாதவாறு செய்துள்ளனர்.

இதனையெல்லாம் செய்து விட்டு இன்று வெட்கமற்று ,

ஜாதி வாரியான கணக்கீடு வேண்டும் என்கின்றனர் , ஏதடா பரவாயில்லையென்று எண்ணிப்பார்த்தால் தங்களின் எண்ணிக்கை குறைவாயிருப்பதால் தங்களை "சிறு பான்மைச் சமுதாயமாக அறிவிக்க வேண்டுமாம், அதாவது தங்கள் இனத்தில் 30 % பேர் வறுமையில் வாடுகின்றார்களாம்!!." 

எப்படியிருக்கின்றது பாருங்கள் ஆரியத்தின் அடாவடி, அதாவது திராவிடர்கள் பெரும்பான்மையினமாம் அதற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் ஓர் நாள் வாதாடுவார்கள். ' இன்று வரை திராவிடர்களை ' நாமெல்லோரும் இந்துக்கள்' என்று மூளைச் சலவை செய்தவர்கள் இன்று தங்கள் இனத்திற்கு மத வழியாக அன்றி 'சிறுபான்மை இனம்' எனும் வாதத்தினை வைத்து இட ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை விடுகின்றனர். இன்று 'தகுதி, திறமை' இவையெல்லாம் தேவையில்லை. 

இவர்களின் பின்னால் இந்துக்கள் என்று சென்ற நமதருமைச் திராவிடச் சகோதரர்கள் இது பற்றி எந்தவித விழிப்புணர்வுமின்றி இன்றும் அவர்களை நம்பலாம். இதுதான் காலக் கொடுமை. வெட்டுபவனை ஆடு நம்புவதுதான் இயல்பு.

திராவிட இனமானது 70 % வறுமையில் வாடுகின்றது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் பெரும்பான்மை இனமானது வாழ்விழந்தால் கூடப் பரவாயில்லையாம், இவர்களில் சிரமப்படும் 30 % பேர் நன்கு வாழ வேண்டும்.

பெரும்பான்மை இனங்களின் ஆழ்ந்த உறக்கம் இவர்களுக்குக் கொண்டாட்டம், மாவிலும் கொள்ளை, பணியாரத்திலும் கொள்ளை. இறைவன் பெயரால் எல்லோருக்கும் மொட்டையடிக்கும் ஆரியத்தை திராவிடம் வீழ்த்த வேண்டுமானால் முதலில் பக்தி ஒழிய வேண்டும்.

இவர்கள் உண்மையிலேயே இட ஒதுக்கீட்டை விரும்பினால் அய்யா அவர்கள் சொன்ன வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டை ஒத்துக் கொள்ளட்டும். அதுதான் உண்மையான தீர்வாகயிருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக